ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் என வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் அரியலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் அருள்மொழி கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், பாமகவையும், வன்னியர் சங்கத்தையும் உருவாக்கியவர் ராமதாஸ் என்றும், அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் எந்த சலசலப்பும் கிடையாது எனவும் தெரிவித்தார்.