திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளை, தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகப் பள்ளி பணியாளர்கள் தூய்மைப்படுத்தினர்.
அந்த பள்ளியின் வகுப்பறைகள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது குறித்தும், விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது பற்றியும் தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
அதனடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் கோபி தலைமையில் பணியாளர்கள் பள்ளி முழுவதும் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.