அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற எம்ஐடி எனும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வியாழக் கிழமையன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி, பாலஸ்தீனத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
அப்போது பேசிய மேகா, பாலஸ்தீனத்தை பூமியிலிருந்து துடைத்தெறிய இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், எம்ஐடி அதன் ஒரு பகுதியாக இருப்பது வெட்கக் கேடானதென்றும் தெரிவித்தார்.
அத்துடன் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இஸ்ரேல் ராணுவத்துடன் தொடர்ந்து உறவு கொண்டுள்ளதையும் மேகா கண்டித்தார்.