நைஜீரியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியா நாட்டின் மார்க்கெட் நகரான மோக்வா, மழை வெள்ளத்தில் மூழ்கியது. மோக்வா நகருக்கு அருகில் உள்ள அணை உடைந்ததால் நகருக்குள் வெள்ளம் புகுந்து நிலைமை மேலும் மோசமானது.
கனமழை காரணமாக ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.