திண்டுக்கல் அருகே மின்சாரம் உற்பத்தி செய்யும் காற்றாலை தூணை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியில் காற்றாலை தூண் எடுத்துச் செல்லப்பட்டது. அம்பாத்தூர் பகுதி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காற்றாலை தூண் கவிழ்ந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
மேலும், தனியார் நிறுவன ஊழியர்கள் லாரியுடன் கவிழ்ந்த ராட்சத தூணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அம்பாத்தூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.