தமிழகத்தில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நடுப்புணி பகுதியில் தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் அகில பாரத தலைவர் சிவபிரசாத் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள புராதன கோயில்களை உடனடியாக புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.