ஜெர்மனியில் சிறிய ரக விமானம், வீட்டின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர்.
ஜெர்மனி நாட்டின் எர்புருட் நகர் அருகே, அல்கர்செல்பென் பகுதியிலிருந்து முசென்கல்பச்ட் விமான நிலையத்திற்குச் சனிக்கிழமை காலை சிறிய ரக விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தை 71 வயதான மூதாட்டி ஓட்டிச்சென்றார். இந்நிலையில் அந்த விமானம், கொர்சன்பரிச் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின்மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் விமானியான மூதாட்டி மற்றும் விபத்துக்குள்ளான வீட்டிலிருந்த நபர் என 2 பேர் உயிரிழந்தனர்.