கோடை விடுமுறைக்குப் பிறகு கேரளாவிலும் பள்ளிகள் திறந்த நிலையில், மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர்.
தமிழகத்தைப் போலக் கேரளாவிலும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
அந்தவகையில், தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு திலகமிட்டு, ஆரத்தி எடுத்து ஆசியர்கள் வரவேற்றனர்.
மேலும், காலில் விழுந்து ஆசி வாங்கிய மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர். தொடர்ந்து குத்து விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டனர்.