தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் பெண் உள்பட இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதேபோல் செண்பகா நகரை சேர்ந்த கஸ்தூரி என்பவரை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்தத சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.