மேட்டூர் அருகே இந்திய பாதுகாப்புப் படையினரைப் பாராட்டும் விதமாக பாஜக-வினர் 60 அடி நீள தேசிய கொடியை ஏந்தி பேரணியாகச் சென்றனர்.
‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் வெற்றி கண்ட இந்திய பாதுகாப்புப் படையினரைப் பாராட்டி, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள சந்தைப்பேட்டைப் பகுதியில், 60 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியை ஏந்தி பாஜக-வினர் பேரணியாகச் சென்றனர்.
மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து கொளத்தூர் பேருந்து நிலையத்தை அடைந்தது.
இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மேட்டூர் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.