சென்னை, வானகரத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் வாக்கத்தான் சென்றது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
வானகரத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் ஆதரவின்றி தெருவில் கைவிடப்படும் நாய்களைப் பாதுகாப்பதற்காக நிதி திரட்டும் வகையில் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் என உள்ளூர் நாய்களும், புல்லிகுட்டான், லாப்ரடர், பாக்சர் என வெளிநாட்டு நாய்களும் கலந்து கொண்டன. நாய்கள் வண்ண ஆடை மற்றும் அணிகலங்களுடன் சென்றன. இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.