ஞானசேகரனுக்கு நன்னடத்தை உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது என்றும் ஞானசேகரன் 30 ஆண்டுகள் கண்டிப்பாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்தார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்தே மாதங்களில் சென்னை மகளிர் நீதிமன்றம் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
நூலிழை அளவுகூட எதையும் விடாமல் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது என்றும் நன்னடத்தை உள்ளிட்ட எந்த சலுகையும் வழங்கப்படாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என வழக்கறிஞர் மேரி ஜெயந்தி குறிப்பிட்டார்.
தான் அண்ணா பல்கலை ஊழியர் என்று மாணவியை ஏமாற்றவே போன் செய்வது போல் ஏமாற்றியுள்ளார் ஞானசேகரன் என தெரிவித்தவர், சம்பவத்தன்று ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளேன் மோடி இருந்தது தடயவியல் ஆய்வில் தெரியவந்தது என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறினார்.