கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழுகூர் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் அவர்கள் அறுவடை செய்த நெல்லினை வீட்டிலேயே சேமித்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் பலமுறை மனு அளித்தும் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் டிராக்டரில் நெல்லை கொண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.