பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 5 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பொன்னரசன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் திடீரென மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் தீ மளமளவென அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், 5 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து பேரணாம்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.