மின்சார வாகன உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய கனரக தொழில்துறை, உருக்குத் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தலைமையில் டெல்லி நிா்மாண் பவனில் மின்-வாகன ஊக்குவிப்பு திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
அப்போது வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி, உலகளாவிய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, விண்ணப்பதாரர்கள் ஒப்புதல் பெற்ற நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை முழுமையாக உள்ளமைக்கப்பட்ட நான்கு சக்கர வாகன அலகுகளை இறக்குமதி செய்ய 15 சதவீத இறக்குமதி வரிச் சலுகைகளுடன் அனுமதிக்கப்படுவர்.