பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.
அதில், கல்லாமேடு பகுதியில் இறைச்சிக்காகச் சட்டவிரோதமாகப் பசு மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசு மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு போலவே சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பசு மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.