கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், வங்கியில் 58 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜயபுரா மாவட்டம் பசவனா பாகேவாடி தாலுகாவிற்குட்பட்ட மனகுளி நகரில், கனரா வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் கடந்த மாதம் 25ஆம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. விசாரணையில், வங்கியிலிருந்து 58 கிலோ தங்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 53 கோடியே 26 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.