ஆபத்தை உணராமல் ரயில் படிக்கட்டில் நடனமாடி பெண் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பெரும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு சம்பந்தப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த ஷகிலா பானு என்பவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஆபத்தை உணராமல் ரயில் படிக்கட்டில் நின்று நடனமாடி அவர் பதிவிட்ட வீடியோ பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, ஷகிலா பானு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ரயில்வே போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வரும் நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு ஷகிலா பானு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விளையாட்டுத்தனமாகச் செய்ததாகவும், வீடியோவை நீக்கிவிட்டதாகவும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.