கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வாகனத்தில் நீட்டிக்கொண்டிருந்த தகரச் சீட்டுகள் மீது மோதி இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் உயிரிழந்தார்.
ஈரோடு – கோபி சாலையில் மேற்கூரை அமைக்கும் தகரச் சீட்டுகளை எடுத்துக்கொண்டு சரக்கு வாகனம் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனம் வளைவில் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம், தகரச் சீட்டுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கோபியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ரவிக்குமார் என்பவரைப் பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.