திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த லாட்டரி சீட்டில் ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப்போனது.
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியின்போது, பக்தர் ஒருவர் உண்டியலில் செலுத்திய 12 கோடி ரூபாய் பம்பர் லாட்டரி சீட்டை அதிகாரிகள் எடுத்தனர்.
அதிலிருந்த எண்ணை வைத்து பரிசுத்தொகை உள்ளதா எனச் சோதித்துப் பார்த்தபோது ஒரே ஒரு எண்ணில் பரிசுத்தொகை தவறிப் போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அதிகாரிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.