கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உரிய விலை கிடைக்காததால் மாங்காய்கள் அறுவடை செய்யப்படாமல் மரத்திலேயே விடப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 38 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோ மாங்காயை 12 ரூபாய்க்குக் கொள்முதல் செய்ய மாங்கூழ் தொழிலதிபர்கள் முதலில் ஒப்புக்கொண்டனர்.
ஆனால், 3 ரூபாய்க்கு மாங்காய்களைக் கொள்முதல் செய்த அவர்கள், இனி அந்த விலையையும் வழங்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுத் தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.