திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையை மூடக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் ஈக்களால் பல்வேறு தொந்தரவுகளைச் சந்திப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கச் சென்ற விவசாயிகளை போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தடுத்து நிறுத்தினர்.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் கோழிப்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த வட்டாட்சியர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, விவசாயிகளுக்கும், கோழிப்பண்ணை நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.