வாணியம்பாடி அருகே பல் சிகிச்சைக்குச் சென்ற 8 பேர் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாகத் தனியார் மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அறிவரசன் என்பவர் நடத்தி வரும் தனியார் பல் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் தொற்று ஏற்பட்டு இறந்ததாக ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டது.
இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 நாட்களுக்கு முன்பு மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தனியார் பல் மருத்துவமனை மருத்துவர் அறிவரசனிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் தனியார் பல் மருத்துவமனைக்குச் சீல் வைத்தனர்.