தஞ்சை அருகே டாஸ்மாக் கடையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூரைச் சேர்ந்த ரகு என்பவர், தஞ்சாவூர்-மணகரம்பை புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றார்.
அப்போது, மற்றொரு தரப்பினரும் மது வாங்க வந்தனர். யார் முதலில் மது வாங்குவதென இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அந்த இளைஞர்கள் ரகுவை தாக்கி உள்ளனர். தகவல் அறிந்து வந்த ரகுவின் உறவினரான விஜய் என்பவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.