சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலர் நாய்கள் கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை அருகே மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
மூலக்கொத்தளம் பிபி கோயில் அருகே காத்திருந்த போது மகி என்பவர் ராட்வீலர் வகையைச் சேர்ந்த 4 நாய்களை வாக்கிங் அழைத்து வந்துள்ளார். அப்போது, பள்ளி மாணவர்களைப் பார்த்துக் குரைத்த நாய்கள், அருகே நின்றுகொண்டிருந்த முத்துவை கடித்துக் குதறின.
உடனடியாக, அங்கிருந்தவர்கள் முத்துவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகி என்பவரின் வீட்டில் 5க்கும் மேற்பட்ட ராட்வீலர் நாய்கள் உள்ளதாகவும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நாய்கள் அழைத்துவரப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.