பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஷாட் தான் இந்த ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஷாட் என முன்னாள் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டெவிலியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
மும்பை அணியுடனான குவாலிஃபையர்ஸ் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பும்ரா வீசிய 2 யார்கர் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி அசத்தினார்.
அவர் ஆடிய அந்த ஷாட்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் ஏபி டெவிலியர்ஸும் ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.