பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா தேர்வாகவுள்ளார்.
பிசிசிஐ தலைவராகக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரோஜர் பின்னி இருந்து வருகிறார். இவர் 70 வயது என்ற உச்சவரம்பை எட்டவுள்ள நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து ரோஜர் பின்னி விலகவிருப்பதாகவும், துணைத் தலைவராகவுள்ள ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராகப் பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் பிசிசிஐ-யின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.