கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரியில் 10 சதவீதத்தை மத்திய அரசு குறைத்தது. இதன் காரணமாகக் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பு செய்யும் உள்நாட்டு ஆலைகள் மீண்டும் தங்களின் செயல்பாட்டைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவதுடன், தாவர எண்ணெய்களின் விலையில் லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.
மேலும், உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், எண்ணெய் வித்துக்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.