கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்தி வைப்பதாக கமல்ஹாசன் தரப்பில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக் லைஃப் படத்தைத் திரையிட அனுமதிக்கக் கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் கன்னட மொழி குறித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதில் கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் பிரச்சனையின் தீவிரத்தை கமல்ஹாசன் உணர வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், திரைப்படத்தை விடத் தேசத்தின் ஒற்றுமையே பெரிது என்பதை கமல்ஹாசன் தெரிந்து கொள்ள வேண்டுமெனக் கருத்து தெரிவித்தனர்.
மேலும் கமல்ஹாசன் வழங்கிய கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை ஏன் இல்லை என்றும் கேள்வி எழுப்பினர். அப்போது, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமல்ஹாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தரப்பில் கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்தி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.