செங்கம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அரட்டவாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய அலுவலர்கள் இல்லாததால் நெல் மூட்டைகள் வளாகத்திலேயே தேக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மழை வந்தால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. இதனால், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும், நெல் கொள்முதல் செய்ய 2 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, உடனடியாக நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.