இந்தியாவின் வந்தே பாரத் ரயில்களை தென் அமெரிக்க நாடான பராகுவே வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் திட்டம் நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பயண நேரம் குறைவதாகவும், இருக்கை, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை நவீன முறையில் இருப்பதகாவும் பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி வந்த பராகுவே அதிபர் சாண்டியாகோ பெனா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அட்லான்டிக் மற்றும் பசுபிக் கடல்களை இணைக்கும் ரயில் திட்டத்தில் இந்திய ரயில்வேயின் பங்கு இடம் பெற வேண்டும் என தெரிவித்தார். வந்தே பாரத் ரயில்களை வாங்க ஆர்வமுடன் இருப்பதகாவும் அவர் கூறினார்.