சென்னை திருவல்லிக்கேணி அருகே சாலையை கடக்க முயன்றபோது சொகுசு கார் மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி அருகே இரவு வாலாஜா சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வளர்மதி என்பது தெரியவந்தது. மேலும், சொகுசு காரில் வந்து விபத்து ஏற்படுத்திய நபர் வேப்பேரியைச் சேர்ந்த அசோக் பதான் என்பதும் தெரியவந்தது.