சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் உயிரிழந்தார்.
கோவையை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பணியாளரான பிரகாஷ்ராஜ் என்பவர் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சிக்காக வந்துள்ளார். வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே தேநீர் அருந்த சென்றுள்ளார்.
அப்போது, கடையின் லைட்டிங் போர்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பிரகாஷ்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.