மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கண்மாய் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனை நவீனப்படுத்தி சுற்றுச்சாலை மற்றும் பூங்கா அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தலின் பேரில் பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான அதிகாரிகள் கண்மாயை ஆய்வு நடத்தினர்.
அரசிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரியத் திட்ட மதிப்பிட்டுடன், கண்மாயை நவீனப்படுத்தி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.