வேலூர் மாவட்டம், சாத்கர் மலைப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 3 இளைஞர்களில் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஹரி, விஜய் மற்றும் சபரீசன் ஆகியோர் சாத்கர் மலையில் உள்ள வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு துளைத்து ஹரி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த பேரணாம்பட்டு போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.