மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், நிபுணர் குழு அமைத்து ‘மனுசி’ படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவைப் பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.
மேலும், பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை எடிட் செய்யத் தயார் எனவும், படத்தை மறு ஆய்வு செய்யக் குழு அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.