சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் நிதி நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்டவர்களின் ஆவணங்களைச் சேகரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தனியார் நிதி நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்த தனது ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் கோடி கணக்கில் மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், மோசடி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் சிபிஐ ஆய்வாளர் தினேஷ் தலைமையிலான குழு முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.