ரித்திஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் செய்த தவறு துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து நிற்பதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
பொன்முடி வழக்கில் நிறுத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் செந்தில் பாலாஜி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.
தமிழக அரசு செந்தில் பாலாஜியைக் காப்பாற்ற முயற்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய அவர், ரித்திஷ், ஆகாஷ் பாஸ்கரன் செய்த தவறு உதயநிதி வீட்டு வாசலில் வந்து நிற்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என நாடகம் போடுகிறார் என எஸ்.ஜி. சூர்யா குறிப்பிட்டார்.