புதுச்சேரியில் சிறுநீர் அடங்காமை, குடல் இறக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்குத் தீர்வாக உயிரியல் மெஷ்களை கண்டுபிடித்து உலக சாதனை படைத்த வேதியியல் ஆராய்ச்சி மாணவி, துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் சபாநாயகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலைச் சேர்ந்த மாணவி பிரீத்தி, மும்பை ஐஐடி-யில் வேதியியல் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானோர் சிறுநீர் அடங்காமை, குடல் இறக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகளால் அவதியடைந்து வரும் நிலையில், ஆராய்ச்சி மாணவியான பிரீத்தி அதற்குத் தீர்வாக பெல்விக் ஃப்ளோர் சாப்போர்ட் மெஷ்கள் எனப்படும் உயிரியல் மெஷ்கணை கண்டுபிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இந்நிலையில், மாணவி பிரீத்தி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.