இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் எட்டாவது பதிப்பில் பேசிய அவர், அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்குத் தீவிரம் காட்டி வருவதாக கூறினார்.
இந்த ஒப்பந்தங்கள் 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 191 பில்லியன் டாலர்களிலிருந்து, 500 பில்லியன் டாலர்களாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.