சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே கால்நடைகளை திருடியதாக சகோதரர்கள் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
அழகமாநகரி கிராமத்தை சேர்ந்த சுப்பு என்பவரது கால்நடைகள் திருடப்பட்ட நிலையில், கட்டானிபட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் சிவசங்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து இருவரையும் அப்பகுதி இளைஞர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து உயிரிழந்த இருவரின் சகோதரி புகாரளித்த நிலையில் 13 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.