கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரி கோடைக் காலத்தில் முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரி மூலமாக 44 ஆயிரத்து 586 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாப்பாக்குடி, முஷ்ணம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கோடை மழை பெய்து வந்தது.
இதையடுத்து, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவான 47 புள்ளி 50 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து 154 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.