தெலங்கானா மாநிலம், விகாராபாத் நகரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணினி பயிற்சி மைய உரிமையாளரை உறவினர்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
விகாரபாத் நகரில் நவாஸ் என்பவர் கணினி பயிற்சி மையம் நடத்தி வரும் நிலையில், மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது.
இது குறித்து அறிந்த மாணவியின் உறவினர்கள் நவாஸ் மீது தாக்குதல் நடத்தினர். தகவலறிந்து வந்த காவல்துறை, நவாஸை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.