இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார்.
இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 22-20, 21-23, 21-15 என்ற செட் கணக்கில் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிந்து அடுத்து தாய்லாந்தின் போன்பவீ சோச்சுவோங்குடன் மோதவுள்ளார்.