பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கர்மாவும், கடவுளும், பதிலடி கொடுக்கட்டும் எனப் பாடகி சின்மயி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தனது பதிவில், கடந்த சில வருடங்களாக அவமானங்கள், துன்புறுத்தல்கள், பொய்யர், அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்ட பெண் என்ற பல விமர்சனங்களை எதிர்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முத்த மழைப் பாடலால் தற்போது மக்களிடம் தான் பெற்றுவரும் ஆதரவுகளைக் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ள சின்மயி, உண்மை வெல்லட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.