விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!
Jun 6, 2025, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Web Desk by Web Desk
Jun 5, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேன் கூட்டில் கை வைத்த கதையாக, ரஷ்யாவே எதிர்பாராத வகையில், ரஷ்யா மீது  உக்ரைன் நடத்திய ஸ்பைடர் வெப் தாக்குதல், இருநாடுகளுக்கு இடையேயான போரை மேலும் தீவிரமாக்கி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா- உக்ரைன் போரில், குறிப்பிடத் தக்க திருப்பமாக,   ரஷ்யாவின் முக்கிய ராணுவ விமான தளங்களை உக்ரைன் தாக்கி அழித்துள்ளது.

இஸ்தான்புல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்பு நடந்த ஸ்பைடர் வெப் தாக்குதலை புத்திசாலித்தனமானது  என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டியிருந்தார். ரஷ்ய இராணுவம் எல்லாவற்றையும் இழந்துவிட்டது என்றும், ரஷ்யா உக்ரைனிடம் தோற்று விட்டது என்றும் மேற்கத்திய ஊடகங்கள் எழுதியுள்ளன.

ஸ்பைடர் வெப் தாக்குதல் நடந்த 72 மணி நேரத்துக்குள் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட உக்ரைனின் ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
.2,000க்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். உக்ரைனின் இராணுவத் தளவாடங்கள்,ஆயுத சேமிப்பு கிடங்குகள் உட்பட நாட்டின் மின் உள்கட்டமைப்புகள்  மீது குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன.

“சாத்தான்-2” ஏவுகணைகள் உட்படத் தான் வைத்துள்ள பேரழிவு ஆயுதங்களை உக்ரைனுக்கு அப்பாலும் ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்துச் செலுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் RS-28 சர்மாட் ஏவுகணையின் செல்லப் பெயர் சாத்தான் ஆகும்.  அதன் அழிவுத் திறனுக்காகச் சர்வதேச நாடுகளால் சாத்தான் என்று அழைக்கப் படுகிறது. RS-28 சர்மாட் ஒரு திரவ எரிபொருளால் இயக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை 15 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். ஒரே தாக்குதலால் பல நகரங்களை அழிக்கும் ஆற்றலை உள்ளடக்கியதாகும்.

2022 ஆம் ஆண்டு, RS-28 சர்மாட் கண்டம் பாயும் ஏவுகணையின் செயல்பாட்டு நிலைநிறுத்தலை அறிவித்த ரஷ்ய அதிபர் புதின், அடுத்து வரும் 40 ஆண்டுகளில் ரஷ்யாவின் அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைத் தடுக்கும் வான்  பாதுகாப்பை  அமெரிக்காவால் உருவாக்க முடியாது என்றும் கூறினார்.

சாத்தான்-2 என்று அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட RS-28 சர்மாட் ஏவுகணை  18,000 கிலோமீட்டர் வரை சென்று தாக்க கூடிய திறன் கொண்டதாகும். இது ரஷ்யாவின் ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாகும். உக்ரைனுக்கு உதவும் நேட்டோ நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கையாகக் கடந்த ஆண்டு, ஓரெஷ்னிக் ஏவுகணை சோதனையை  வெற்றிகரமாக ரஷ்யா நடத்தியது.

புதினைப்  பொறுத்தவரை, உக்ரைனுடனான போர் நேட்டோவை ரஷ்யா எல்லையிலிருந்து அப்புறப் படுத்துவதுதான். எனவே தான் போர் தொடங்கியதிலிருந்தே நிதானத்தைக் கடைப்பிடித்து எப்போதும் அளவான முறையில் பதிலளித்துள்ளார்.

போரால் அழிந்து வரும் உக்ரனை மீண்டும் கட்டி எழுப்புவதறகான பட்ஜெட் ஒரு  ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.  போர் நீண்ட காலம் நீடிக்க,நீடிக்க  மறுகட்டமைப்புக்கான பில் பெரியது. மறுகட்டமைப்பது என்பது உக்ரைனை தனியார்மயமாக்குவது தான். இதில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் போட்டியில் உள்ளன.

ஒரு  ட்ரில்லியன் ரியல் எஸ்டேட் வாய்ப்பை ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.  அதிக பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. அதிக ஊடக கவரேஜ் மற்றும் அதிகப் பணத்தை ஜெலென்ஸ்கி விரும்புகிறார்.

ஒரு கையில் ஐரோப்பிய ஒன்றியம், இன்னொரு கையில் ட்ரம்ப். இதில் ஜெலன்ஸ்கி சாமர்த்தியமாக  விளையாடுகிறார். ரஷ்யாவின் பொறுமையை ஒவ்வொரு நாளும் சோதித்து வந்த ஜெலென்ஸ்கி  முழு உலகத்தையும் மூன்றாம் உலகப் போருக்குத் தள்ளியுள்ளார்.

ஒப்பிடமுடியாத அழிவு சக்தியுடன் கூடிய சாத்தான் 2  போன்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளை ரஷ்யா  இறுதி ஆயுதமாகப் பயன்படுத்தினால், நினைத்துப் பார்க்க முடியாத அழிவை உலகம் சந்திக்க நேரிடும்.

பல்வேறு நாடுகள் அழியும், பெரும்பாலான மக்கள் அழிந்து, பூமியின் பெரும்பகுதி வாழத் தகுதியற்றதாக மாறிவிடும். ரஷ்ய அதிபர் புதின் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது உலகம் என்றால் மிகையில்லை.

Tags: ஏவுகணைWorld War 3 soon? : Panic over Satan-2 missile that will reduce cities to ashesவிரைவில் 3ம் உலகப் போர்?உலகப் போர்ரஷ்யாவின் RS-28 சர்மாட் ஏவுகணைRussia's RS-28 Sarmat missile
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Next Post

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Related News

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சீனாவில் நூற்றாண்டு பழமையான கட்டடங்கள் இடமாற்றம்!

ட்ரம்ப், ஜி ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு – வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் – ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை!

ரஃபேல் போர் விமான பாகங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்சுடன் ஒப்பந்தம்!

ஜம்மு – காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41-வது ஆண்டு நிறைவு – பொற்கோயில் அருகே பாதுகாப்பு அதிகரிப்பு!

கொச்சி அருகே மூழ்கிய கப்பலில் உள்ள கண்டெய்னர்களில் இருந்த பொருட்களின் பட்டியல் வெளியீடு!

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அளித்த முப்படை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தப்பி செல்ல முயற்சி – கொள்ளை கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கும்பகோணம் பாணபுரிஸ்வரர் கோவிலில் ஆகமம் பயிலாமல் அபிஷேகம் செய்த விவகாரம் – அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies