ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறையால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களுக்காக நியாய விலைக்கடைகளை நாடும் பொதுமக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் புதிய நடைமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் 38 ஆயிரத்து 411 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றி வரும் நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி அமலாகியிருக்கும் புதிய நடைமுறையால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பில் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தோடு, பொருட்களை எடையிடும் இயந்திரமும் வைபையில் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மூலம் பொருட்களைப் பெற 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நியாயவிலைக்கடையில் காத்திருக்க வேண்டிய சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், டிஜிட்டல் மயமாக்கல் எனக்கூறி ஏற்கனவே எளிதாக இருந்த நடைமுறையை மாற்றியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் வைபையில் தொழில்நுட்ப கோளாறுகளும் அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்களுக்கும்  ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி அமலுக்கு வந்திருக்கும் இந்த புதிய முறை குறித்து உரியப் பயிற்சி வழங்காத காரணத்தினால் அதனைக் கையாளுவதில் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த விலையில் அப்பொருட்களைப் பெற நியாய விலைக்கடைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை அமைந்திருக்கிறது. பழைய நடைமுறையோ, புதிய நடைமுறையோ எதுவாக இருந்தாலும் தங்களுக்கான பொருட்களை நேரவிரயமின்றி பெறுவதற்கு ஏதுவாக எளிமையான நடைமுறையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Ration ShopTn newsNew procedure at ration shops: People are struggling to get essential items
Share
Tweet
SendShare
Previous Post

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Next Post

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies