ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!
Jul 31, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி கடைப்பிடிக்கப்படும் புதிய நடைமுறையால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் வேளையில் அத்தியாவசியப் பொருட்களுக்காக நியாய விலைக்கடைகளை நாடும் பொதுமக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் தமிழக அரசின் புதிய நடைமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையால் 38 ஆயிரத்து 411 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்வதில் முக்கிய பங்காற்றி வரும் நியாயவிலைக்கடைகளில் முன்னறிவிப்பின்றி அமலாகியிருக்கும் புதிய நடைமுறையால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பில் போடுவதற்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தோடு, பொருட்களை எடையிடும் இயந்திரமும் வைபையில் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மூலம் பொருட்களைப் பெற 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நியாயவிலைக்கடையில் காத்திருக்க வேண்டிய சூழலுக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நியாய விலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், டிஜிட்டல் மயமாக்கல் எனக்கூறி ஏற்கனவே எளிதாக இருந்த நடைமுறையை மாற்றியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் வைபையில் தொழில்நுட்ப கோளாறுகளும் அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்களுக்கும்  ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது.

எந்தவித முன்னறிவிப்புமின்றி அமலுக்கு வந்திருக்கும் இந்த புதிய முறை குறித்து உரியப் பயிற்சி வழங்காத காரணத்தினால் அதனைக் கையாளுவதில் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்குச் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையை எளிமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், குறைந்த விலையில் அப்பொருட்களைப் பெற நியாய விலைக்கடைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய நடைமுறை அமைந்திருக்கிறது. பழைய நடைமுறையோ, புதிய நடைமுறையோ எதுவாக இருந்தாலும் தங்களுக்கான பொருட்களை நேரவிரயமின்றி பெறுவதற்கு ஏதுவாக எளிமையான நடைமுறையாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Ration ShopTn newsNew procedure at ration shops: People are struggling to get essential items
ShareTweetSendShare
Previous Post

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Next Post

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies