அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!
Jun 14, 2026, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாநகரப்பகுதிகளில் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களால் இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய பேருந்துகள் அச்ச உணர்வுடனேயே பயணிக்கும் பயணிகள் குறித்தும், தனியார் பேருந்துகளுக்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாநகராட்சி என்பது  டவுனில் தொடங்கி பாளையங்கோட்டை, மகாராஜா நகர் வரை பரந்து விரிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கியதாகும். நீண்ட நெடிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி ஏராளமான தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலைக்குச் செல்வோர் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அத்தகைய தனியார் பேருந்துகள் முன் அனுபவமற்ற ஓட்டுநர்களை வைத்து இயக்கப்படுவது அதில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தனியார் பேருந்துகளை இயக்கும் அனுபவமற்ற ஓட்டுநர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்குகளை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிவேகத்துடன் பேருந்துகளை இயக்குவதாகவும், சக பேருந்துகளை முந்திச் செல்வதில் ஆர்வம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அவசரத்தில் பேருந்து நிலையங்களைப் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதும், பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே பேருந்துகளை இயக்குவதும் அதில் பயணிக்கும் பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது

பேருந்துகளை இயக்குவதற்கு வகுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைத் துளியளவும் பின்பற்றாத ஓட்டுநர்கள் மீதும், அதனைத் தடுக்க தவறிய நடத்துனர்கள் மீதும் பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கு முன் அனுபவமற்ற ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் நியமிக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கும் பொதுமக்கள், தனியார் பேருந்துகளைக் குழு அமைத்து அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: பயணிகள் அச்சம்Danger from inexperienced drivers: Passengers are afraid due to the risk of accidents
ShareTweetSendShare
Previous Post

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Next Post

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies