குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!
Aug 8, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. சேலம் மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் பள்ளபட்டி பூங்கா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சியின் மையப்பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பள்ளபட்டி ஏரி பூங்கா தான் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பிரதான பொழுதுபோக்கு தளமாகத் திகழ்கிறது. ஏரிக்கரையைச் சுற்றி பத்திற்கும் அதிகமான குடில்கள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், பாதுகாப்பிற்காகக் கம்பி வேலிகள் என அத்துனை சிறப்பு அம்சங்களுடனுன் காணப்பட்ட இப்பூங்கா அண்மைக்காலமாக எந்தவித வசதியுமில்லாத அவலநிலையில் காட்சியளிக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இப்பூங்கா,  முதலமைச்சரால் திறந்து வைத்த ஒரே ஆண்டிற்குள் பொலிவிழந்து காணப்படுகிறது.

ஏரிப் பூங்கா பயன்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்திற்குள் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார குடில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அத்தகைய செயல்களை செய்தவர்கள் யார் என்ற விசாரணை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் மாலை நான்கு மணியை கடந்து விட்டால் இப்பூங்கா முழுவதும் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு காலி பாட்டில்களைப் பூங்காவிலேயே போட்டு விடுவதோடு, நடைப்பயிற்சிக்கு வருவோரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் மதுப்பிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. மாலை நேரங்களில் மதுப்பிரியர்களின் தொல்லை ஒருபுறமிருக்க, இரவு நேரங்களில் பாலியல் தொழில் அரங்கேறும் இடமாகவும் இப்பூங்கா மாறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளபட்டி ஏரி பூங்கா, முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. பூங்காவைப் பராமரிக்கத் தவறிய சேலம் மாநகராட்சி மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்

பெருகிவரும் நகர்மயமாக்கலுக்கு மத்தியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், அவர்களின் ஓய்வு நேரத்தை விருப்பம் போலக் கழிக்கவும் உதவும் பூங்காக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனச் சேலம் மாநகராட்சி பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Pallapatti Parka garbage dump: People are shocked as it has become a tent for alcohol loversகுப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies