குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!
Jun 23, 2026, 01:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

Murugesan M by Murugesan M
Jun 5, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. சேலம் மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியிருக்கும் பள்ளபட்டி பூங்கா குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சியின் மையப்பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பள்ளபட்டி ஏரி பூங்கா தான் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பிரதான பொழுதுபோக்கு தளமாகத் திகழ்கிறது. ஏரிக்கரையைச் சுற்றி பத்திற்கும் அதிகமான குடில்கள், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், பாதுகாப்பிற்காகக் கம்பி வேலிகள் என அத்துனை சிறப்பு அம்சங்களுடனுன் காணப்பட்ட இப்பூங்கா அண்மைக்காலமாக எந்தவித வசதியுமில்லாத அவலநிலையில் காட்சியளிக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட இப்பூங்கா,  முதலமைச்சரால் திறந்து வைத்த ஒரே ஆண்டிற்குள் பொலிவிழந்து காணப்படுகிறது.

ஏரிப் பூங்கா பயன்பாட்டிற்கு வந்த ஒரு மாதத்திற்குள் அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்கார குடில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. அத்தகைய செயல்களை செய்தவர்கள் யார் என்ற விசாரணை இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் மாலை நான்கு மணியை கடந்து விட்டால் இப்பூங்கா முழுவதும் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு காலி பாட்டில்களைப் பூங்காவிலேயே போட்டு விடுவதோடு, நடைப்பயிற்சிக்கு வருவோரிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் மதுப்பிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது. மாலை நேரங்களில் மதுப்பிரியர்களின் தொல்லை ஒருபுறமிருக்க, இரவு நேரங்களில் பாலியல் தொழில் அரங்கேறும் இடமாகவும் இப்பூங்கா மாறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பள்ளபட்டி ஏரி பூங்கா, முறையாகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. பூங்காவைப் பராமரிக்கத் தவறிய சேலம் மாநகராட்சி மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்

பெருகிவரும் நகர்மயமாக்கலுக்கு மத்தியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், அவர்களின் ஓய்வு நேரத்தை விருப்பம் போலக் கழிக்கவும் உதவும் பூங்காக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனச் சேலம் மாநகராட்சி பொதுமக்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Pallapatti Parka garbage dump: People are shocked as it has become a tent for alcohol loversகுப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies