நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்று, ஏப்ரல் 4ஆம் தேதியுடன் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஜூலை 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.